ஜெயமோகனின் "பின்தொடரும் நிழலின் குரல்" கஷ்டப்பட்டுப் படித்துக் கொண்டிருக்கிறேன். கம்யூனிசம் சார்ந்த கதை.கதையிலும் நடைமுறையிலும் கம்யூனிஸ்ட்டுகள் மிகுந்த சோர்வைத் தருகிறார்கள்.
புரிந்து கொள்ள எளிய கோட்பாடுதான் கம்யூனிசம் என்றாலும், அதன் கிளைப் பிரிவுகள், ஆரம்பக் கால தலைவர்கள், புரட்சியாளர்கள் ஆகியோரைப் பற்றிய அரைகுறைப் புரிதல்களும், கம்யூனிசத்திலிருந்து மீண்டவர்களின் எழுத்துக்களும், தற்போதையத் தலைவர்களும், கம்யூனிச நாடுகளின் வீழ்ச்சியும், எழுச்சியும், தொழில் சங்கங்களின் நடவடிக்கைகளும் மிகுந்த குழப்பத்தை விளைவிக்கின்றன.
யாராவது உட்கார வைத்து 'ட்யூஷன்' சொல்லிக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது...
ஒரு நாவலைத் தப்பாகப் படித்துக்கொண்டிருக்கிறேன் என்ற நினைப்பு வருகிறது.. இருந்தாலும் தொடர்கிறேன்...
Tuesday, April 7, 2009
Subscribe to:
Post Comments (Atom)
hi sivram as usually ur sense of humour is very intact even during this difficult time..
ReplyDeletethanks deepan..
ReplyDelete